Sunday, November 6, 2011

பக்கவாத விழிப்புணர்வு பேரணி டாக்டர், நர்ஸ், மாணவர் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2011,01:56 IST
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் சார்பில் பக்கவாத விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பக்கவாத நோய் குறித்த விழிப்புண்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி போராசிரியர்கள், நர்ஸ்கள், பயிற்சி நர்ஸ்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி நேற்று நடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணியை, கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி "டீன்' டாக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் நால்ரோடு, வண்ணாரப்பேட்டை வழியாக சென்ற பேரணி, மீண்டும் அரசு மருத்துவமனையை அடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment