Sunday, October 12, 2025

பதினாறு வார்த்தைகளில் ராமாயணம்.....

பதினாறு வார்த்தைகளில் ராமாயணம்....
"பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார், செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்....

 விளக்கம்:

1. பிறந்தார்:

ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாகப் பிறந்தது.

2. வளர்ந்தார்:

தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே ராமர் வளர்ந்தது.

3. கற்றார்:

வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள்,  கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.‌ பெற்றார்:

வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்திரர் யாகம் காத்து, விஸ்வாமித்திரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.‌ மணந்தார்:

ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர் - சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.

6. சிறந்தார்:

அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும்,  தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7. துறந்தார்:

கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. நெகிழ்ந்தார்:

அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.

*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும்,  தன்னலமற்ற குணத்தையும்,  தியாகத்தையும்,  விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.

*அத்ரி - அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.

*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.

*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.

9. இழந்தார்:

மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.

10. அலைந்தார்:

அன்னை சீதையை தேடி அலைந்தது.

11. அழித்தார்:

இலங்கையை அழித்தது.

12. செழித்தார்:

சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.

ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,  செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.

13. துறந்தார்:

அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில்,  மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக,  அன்னை சீதையைத் துறந்தது.

14. துவண்டார்:

அன்னை சீதையை பிரிய நேர்ந்தது,  ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15. ஆண்டார்:

என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும்,  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும்,  செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.

16. மீண்டார்:

பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".


My ePoster on "Childhood #Epilepsy In Rural Community:Parents Concerns" presented to day on the first day of the XXVII 27th World Congress of #Neurology #WCN2025 at #SEOUL by WFN @wfneurology and KNA on 12.10.2025 -M.A.Aleem Neurologist #Trichy #TamilNadu #India